×

காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் ஆபாச படங்களை உறவினர்கள் நண்பர்களுக்கு அனுப்பி மிரட்டல்: முன்னாள் காதலன் கைது

சென்னை: காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் ஆபாச படங்களை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி மிரட்டிய முன்னாள் காதலனை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இளம்பெண் ஒருவர் புகார் அளித்தார். அந்த புகாரில், யாரோ தன்னுடைய வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், இ-மெயில் ஆகியவற்றை ஹாக் செய்து, தனது ஆபாச புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மூலம் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி அவமானப்படுத்தியுள்ளனர். அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

புகாரின்படி, சென்னை மாநகர தெற்கு மண்டல சைபர் க்ரைம் போலீசார் இளம்பெண் அளித்த இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஐடியை வைத்து விசாரணை நடத்தினர். அதில், ஆழ்வார்திருநகர் சாதிக் பாஷா 1வது ெதருவை சேர்ந்த தமீம் அன்சாரி (22) என தெரியவந்தது. உடனே அந்த நபரை பிடித்து விசாரணை நடத்திய போது, புகார் அளித்த பெண்ணை தமீம் அன்சாரி காதலித்து வந்ததும், இருவரும் பல இடங்களுக்கு சென்று பழகி வந்ததும் தெரியவந்தது. பிறகு தமீம் அன்சாரியின் நடவடிக்கை பிடிக்காததால் புகார் அளித்த பெண் அவரை விட்டு விலகியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தமீம் அன்சாரி தனது காதலியை பழிவாங்க வேண்டும் என்று தனது காதலியின் ஆபாச புகைப்படங்களை நண்பர்கள் மற்றும் அவரது உறவினர்களுக்கு அனுப்பி மிரட்டியது தெரியவந்தது. அதைதொடர்ந்து சைபர் க்ரைம் போலீசார் தமீம் அன்சாரி மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்து காதலியின் ஆபாச புகைப்படங்களை வைத்திருந்த செல்போன் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.

The post காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் ஆபாச படங்களை உறவினர்கள் நண்பர்களுக்கு அனுப்பி மிரட்டல்: முன்னாள் காதலன் கைது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Chennai Police Commissioner ,
× RELATED மரியாதை நிமித்தமாக சென்னை போலீஸ்...