இந்த வெற்றியில் அனைவரது பங்கும் அடங்கியுள்ளது. ஒவ்வொருவரும் அவர்களது பொறுப்பை உணர்ந்து விளையாடி உள்ளனர். எங்களது அடுத்த இலக்கு இறுதிப் போட்டிதான். இந்த போட்டியை பொருத்தவரை முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்களை குவித்து விட்டால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. எந்த ஒரு மைதானத்திலுமே 350 ரன் அடித்தால் அது வெற்றிக்கான ரன்களாக இருக்கும். இந்த போட்டியில் ஸ்ரேயாஸ் மிகவும் தெளிவாக விளையாடினார். அவரை நான் நீண்ட நாட்களாகவே பார்த்து வருகிறேன் அவர் இது போன்ற பெரிய இன்னிங்சை விளையாடக்கூடியவர் தான். அதே போன்று பந்துவீச்சில் சிராஜ் ஒரு குவாலிட்டியான பவுலர்.
அவரிடம் புது பந்தை தந்து இதே போன்று சிறப்பாக வீசினால் எங்களது அணி வேறு விதமாக தெரியும். அந்த அளவிற்கு அவர் சிறப்பாக பந்து வீசக்கூடியவர். வேக பந்துவீச்சாளர்கள் கடைசி இரண்டு போட்டிகளில் சிறப்பாக செயல்படுவது எல்லாம் நல்ல விஷயமாக பார்க்கின்றேன். டிஆர்எஸ் முடிவை எடுப்பது குறித்து ராகுல் மற்றும் பவுலர்களிடம் அதிகாரத்தை கொடுத்து விட்டேன். அவர்கள் தான் எனக்காக முடிவெடுக்க வேண்டும். சில சமயம் சரியாக இருக்கும், சில சமயம் தவறாக கூட போகலாம். அடுத்தது தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள இருக்கிறோம். அவர்களும் சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறார்கள். இது நிச்சயம் நல்ல ஆட்டமாக அமையும்,’’ என்றார்.
The post எங்களது அடுத்த இலக்கு இறுதி போட்டி தான்: கேப்டன் ரோகித்சர்மா பேட்டி appeared first on Dinakaran.