இந்த நீட் தேர்வால் பயிற்சி மையங்கள் நடத்தக் கூடியவர்களே அதிக பயன் பெறுகிறார்கள். ஒவ்வொரு மாணவரும் நீட் தேர்வு பயிற்சிக்கு செல்ல ஆண்டொன்றுக்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதனால்தான் திமுக சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ச்சியாக போராடி வருகிறோம். நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சமீபத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசுக்கு அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒன்றிய அரசு, நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தமிழ்நாட்டில் 1.10 கோடி பேர், நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்திட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
The post தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல் appeared first on Dinakaran.