அதேபோல, ஜூன் 7ம் தேதியான இன்று பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. இந்நிலையில், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மழைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. அதேபோல, அதிகபட்சமாக அரக்கோணத்தில் 11 செமீ மழை பெய்துள்ளது. தலைநகர் சென்னையை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையின் புறநகர் பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
The post தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.