சென்னை: தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. www.tnresults.nic.in., www.dge.tn.gov.in ஆகியவற்றில் மாணவர்கள் முடிவுகளை அறிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் ஏப்ரல் 6- 20 வரை நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 3,976 மையங்களில் 9.38 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்து கொள்ளலாம். மாணாக்கர்கள் தாங்கள் அளித்துள்ள செல்போன் எண்ணிற்கும் தேர்வுமுடிவுகள் குறுந்தகவலாக அனுப்பப்படும்.
The post தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியீடு..!! appeared first on Dinakaran.