தமிழ்நாட்டில் 14 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது. ஒரு இடத்தில் மிக கனமழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 12 செ.மீ மழை பதிவானது. மதுரை தல்லாக்குளத்தில் 11 செ.மீ, திருச்சி புள்ளம்பாடியில் 10 செ.மீ, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி அணைப்பகுதியில் தலா 8 செ.மீ மழை பெய்துள்ளது.
The post தமிழ்நாட்டில் 14 இடங்களில் கனமழை; ஒரு இடத்தில் மிக கனமழை பதிவாகியுள்ளது appeared first on Dinakaran.