இதையடுத்துஅவர் தாக்கல் செய்த ேமல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எம்.திரிவேதி மற்றும் சந்தீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,’பைப்பாஸ் சிகிச்சை என்பது இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் சாரணமாக ஆகிவிட்டது. இதனை நாங்கள் கூகுளில் பார்த்து விவரமாக தெரிந்து கொண்டோம்.
அதனால் இந்த விவகாரத்தில் மருத்துவ ரீதியிலான ஜாமீன் வழங்க எந்த முகாந்திரமும் கிடையாது’’ என தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட செந்தில் பாலாஜி வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். அதற்கு அனுமதி வழங்கிய நீதிபதிகள்,’செந்தில் பாலாஜி தரப்பில் கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்யலாம் என்றும், அதனை தகுதியின் அடிப்படையில் நீதிமன்றம் விசாரணை நடத்தும் என்றும் உத்தரவிட்டு, செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
The post அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய அனுமதி appeared first on Dinakaran.