- கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பினார்
- புது தில்லி
- கெஜ்ரிவால்
- அமலாக்க இயக்குநரகம்
- முதல் அமைச்சர்
- தில்லி
- தின மலர்
புதுடெல்லி: புதிய மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் வரும் 16ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக முதல்வர் கெஜ்ரிவால் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக விசாரிக்க அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இதுதொடர்பாக அமலாக்கத்துறை கெஜ்ரிவால் மீது 2 வது வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மார்ச் 16ல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது.
The post மார்ச் 16ல் நேரில் ஆஜராக கெஜ்ரிவாலுக்கு சம்மன் appeared first on Dinakaran.