×

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ரூ.1,800 கோடி மதிப்புள்ள மெபெட்ரோன் போதைப்பொருள் பறிமுதல்

மத்தியபிரதேசம்: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ரூ.1,800 கோடி மதிப்புள்ள மெபெட்ரோன் போதைப்பொருள் பறிமுதல் செய்தனர். பயங்கரவாத தடுப்புப் பிரிவு, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இணைந்து நடத்திய சோதனையில் போதைப்பொருள் சிக்கியது. சமீபத்தில், போபாலில் உள்ள ஒரு தொழிற்சாலையில் சோதனை நடத்தி எம்.டி மற்றும் எம்.டி தயாரிக்கப் பயன்படுத்திய பொருட்களைக் கைப்பற்றினர். தொழிற்சாலைக்குள் போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்த 2 பேரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ரூ.1,800 கோடி மதிப்புள்ள மெபெட்ரோன் போதைப்பொருள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Bhopal, Madhya Pradesh ,Madhya Pradesh ,Anti-Terrorism Unit ,Anti-Narcotics Unit ,Bhopal ,
× RELATED இந்தூரில் அரைகுறை ஆடையுடன் உலா துபாய்...