இது குறித்து தகவல் அறிந்த நாமக்கல் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். உயிரிழந்த சிறுமியுடன் சேர்ந்து ஷவர்மா சாப்பிட்ட பூபதி, சுஜாதா, சினோஜ், கவிதா ஆகிய 4 பேரையும் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது பற்றி தகவல் அறிந்த, குறிப்பிட்ட அந்த ஓட்டலில் சாப்பிட்ட 43 பேர், நேற்று காலையில் இருந்து, நகரில் உள்ள வெவ்வேறு தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவனைகளில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா, எம்எல்ஏ ராமலிங்கம், எஸ்பி ராஜேஸ்கண்ணன், நகர்மன்ற தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி ஆகியோர், மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். சிறுமி உயிரிழப்பு காரணமான ஓட்டலின் உரிமையாளர் சிங்கிலிப்பட்டியைச் சேர்ந்த நவீன்குமார்(27), சமையல் மாஸ்டரான ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் மககுத்(27), தபாஸ்குமார்(30) ஆகிய 3 பேரையும், நாமக்கல் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், கெட்டுப்போன இறைச்சி என தெரிந்தும், அவர்கள் சமைத்து கொடுத்து, கொலை குற்றத்துக்கு இணையான செயலை செய்துள்ளதாகவும் மாவட்ட எஸ்பி ராஜேஸ்கண்ணன் தெரிவித்துள்ளார்.
The post ஷவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு: 43 பேர் ‘அட்மிட்’; 3 பேர் கைது appeared first on Dinakaran.