இதன் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் கம்பிகள் மீது மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. இதனால் நேற்று இரவு மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று அதிகாலை ஊட்டி தாவரவியல் பூங்கா நுழைவாயில் பகுதியில் இருந்து டாப் கார்டன் செல்லும் சாலையில் இருந்த ராட்சத மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது. அதிகாலை நேரம் என்பதால் சுற்றுலா பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஊட்டி தீயணைப்பு துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர். சுமார் 2 மணி நேரத்துக்கு பின்னர் அவ்வழித்தடத்தில் போக்குவரத்து தொடங்கியது. இதேபோல் ஊட்டியில் இருந்து பார்சன்ஸ்வேலி பகுதிக்கு செல்லும் சாலையில் மரம் ஒன்று விழுந்தது. இதனையும் தீயணைப்பு துறையினர் வெட்டி அகற்றினர். தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பல்வேறு பகுதிகளிலும் மரம் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
The post ஊட்டியில் பலத்த சூறாவளி தாவரவியல் பூங்காவில் மரம் விழுந்து பாதிப்பு appeared first on Dinakaran.