இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி புகழேந்தி ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலையில் 3 நாள் தங்கி விழா நடத்த எவ்வாறு அனுமதிக்க முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி புலிகள் காப்பகமாக உள்ள நிலையில் 3 நாட்கள் விழா நடத்த எவ்வாறு அனுமதிக்க முடியும்? என்றும், 3 நாள் தங்கி வழிபட அனுமதி அளித்து ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது?. அரசு பொறுப்பேற்க முடியுமா அல்லது நீதிமன்ற பொறுப்பேற்க முடியுமா என்றும் மனுதாரருக்கு நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். ஒருநாள் தங்கி வழிபட அனுமதி தர முடியுமா என்பது பற்றி அறநிலையத்துறை பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை ஆணையிட்டு, சடையாண்டி என்பவர் தாக்கல் செய்த மனுவை நாளை ஒத்திவைத்தது.
The post ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலையில் 3 நாள் தங்கி விழா நடத்த எவ்வாறு அனுமதிக்க முடியும்?: ஐகோர்ட் கிளை கேள்வி appeared first on Dinakaran.