அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தங்களது ரோந்து கப்பலை விசைப்படகு மீது மோதினர். மேலும் விசைப்படகை இலங்கை கடல் எல்லைக்கு இழுத்து சென்று வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை பறித்து கடலில் வீசினர். மேலும் 4 மீனவர்களையும் தாக்கி விரட்டியடித்தனர். அவர்கள் தப்பி பிழைத்து தங்களது விசைப்படகில் கோட்டைப்பட்டினம் கடற்கரைக்கு நேற்று காலை வந்து சக மீனவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறினர். இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கரை திரும்பிய மீனவர்கள் கூறுகையில், நமது எல்லையில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் வந்து எங்களை தாக்கினர். மேலும் வலை உள்ளிட்ட உபகரணங்களை பறித்து கடலில் வீசினர். கப்பல் மோதியதில் சேதமடைந்த விசைப்படகை சீரமைக்க ரூ.3 லட்சம் வரை செலவாகும். இலங்கை கடற்படையினரின் தாக்குதலை நிறுத்த ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
The post தடை முடிந்த முதல்நாளே இலங்கை கடற்படை அட்டூழியம் புதுகை மீனவர்கள் படகு மீது ரோந்து கப்பலால் மோதி தாக்குதல்; மீன்பிடி உபகரணங்களை கடலில் வீசி விரட்டியடிப்பு appeared first on Dinakaran.
