இந்நிலையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என காங்கிரஸ் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கொறடா வௌியிட்டுள்ள அறிவிப்பில், “நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் மாநிலங்களவையில் முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்படும். எனவே, காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் செப்டம்பர் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை காலை 11 மணியில் இருந்து அவை ஒத்தி வைக்கப்படும் வரை கட்டாயம் பங்கேற்க வேண்டும். அவையில் நடைபெறும் விவாதங்களில் காங்கிரஸ் எடுக்கும் முடிவுகளை கட்சி உறுப்பினர்கள் ஆதரிப்பதற்காக அனைவரும் நிச்சயம் பங்கேற்பது அவசியம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பாஜ உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என பாஜ கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
The post நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் காங். எம்பிக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: கொறடா உத்தரவு appeared first on Dinakaran.