இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட டிவிட்டர் பதிவு: லேண்டரின் செயல்பாடுகள் சரியாக உள்ளது. லேண்டரின் உயரம் குறைக்கும் பணி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. தற்போது 113 கி.மீ. x 157 கி.மீ. தூரத்தில் நிலவின் சுற்றுப்பாதையில் உள்ளது. 2ம் கட்ட உயரம் குறைக்கும் பணி நாளை (20ம் தேதி) மதியம் 2 மணியளவில் நடைபெறும். இவ்வாறு இஸ்ரோ கூறியுள்ளது. முன்னதாக, நேற்று முன்தினம் விண்கலத்தில் இருந்து பிரிந்த பிறகு லேண்டரில் உள்ள இமேஜர் கேமரா எடுத்த படங்களை இஸ்ரோ வெளியிட்டது. இந்த படங்களில் நிலவின் மேற்பரப்பில் மூன்று இடங்களை குறிப்பிட்டு காட்டுகிறது. ஃபேப்ரி, கியோர்ட்னொ ப்ரோனோ, ஹர்கெபி ஜே என அந்த இடங்களை குறித்துள்ளது. மேலும் கடந்த 15ம் தேதி விண்கலத்தில் இருந்த போது லேண்டர் பொசிஷன் டிடெக்சன் கேமரா மூலம் எடுக்கப்பட்ட படங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
The post விண்கலத்தில் இருந்து பிரிந்த பின் எடுத்த படம் வெளியீடு விக்ரம் லேண்டரின் உயரம் குறைப்பு: இஸ்ரோ தகவல் appeared first on Dinakaran.