இதற்கிடையே, நாமக்கல் மாவட்டம் உள்பட 6 மாவட்டங்களில் 101 டிகிரி வெயில் நிலவியது. ஈரோடு, கரூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், கேரளாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை அங்கு குறைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்துள்ளது. மேலும் மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும் தமிழ்நாட்டில் 25ம் தேதி வரையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.
The post தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவ மழை 25ம் தேதி வரை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.