கர்நாடகாவின் பொம்மசந்திரா மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து ஒசூர் 20.5 கிமீ தொலைவில் உள்ளது. இந்த 20.5 கிலோ மீட்டர் தொலைவில் 11.7 கிலோ மீட்டர் கர்நாடகா மாநிலத்திலும், 8.8 கிலோ மீட்டர் தமிழ்நாட்டிலும் உள்ளது. இரண்டு இடங்களையும் இணைக்கும்போது, மாநிலங்கள் போக்குவரத்து அமைப்புக்கான திட்டச் செலவை பகிர்ந்து கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே டெல்லி விரிவாக்கமான நொய்டா மற்றும் டெல்லி யூனியன் பிரதேசத்திற்கு இடையே ஏற்கனவே மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு மாநிலங்களுக்கு பிரமாண்ட திட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.
The post தென் இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாடு-கர்நாடகா இடையே மெட்ரோ ரயில் இயக்க திட்டம்: ஒசூர்-பொம்மசந்திரா வழி தடத்துக்கான அறிக்கை தயாரிப்பு பணி தொடக்கம் appeared first on Dinakaran.