தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவின் அழைப்பின் பேரில் ஆகஸ்ட் 22 முதல் 24 வரை நடைபெற உள்ள 15வது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தென்னாபிரிக்கா புறப்பட்டார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்காவை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பின் முதல் உச்சிமாநாடு 2019க்கு பிறகு நடைபெற உள்ளது.
பிரிக்ஸ் உச்சி மாநாடு அதன் உறுப்பினர்களுக்கு எதிர்கால ஒத்துழைப்பின் பகுதிகளை அடையாளம் காணவும், நிறுவன வளர்ச்சியை மதிப்பாய்வு செய்யவும் பயனுள்ள வாய்ப்பை வழங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெரிவித்திருந்தார்.
15வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தென்னாப்பிரிக்காவுக்கு செல்வதற்கு முன்னதாக அவர் புறப்படும் அறிக்கையில், பிரிக்ஸ் பல்வேறு துறைகளில் வலுவான ஒத்துழைப்பு நிகழ்ச்சி நிரலை பின்பற்றி வருகிறது என்றார்.
“பிரிக்ஸ் வளர்ச்சியின் கட்டாயங்கள் மற்றும் பலதரப்பு அமைப்பின் சீர்திருத்தங்கள் உட்பட, ஒட்டுமொத்த உலகளாவிய தெற்கின் கவலைகள் குறித்து விவாதிக்கவும் ஒரு தளமாக மாறியுள்ளது என்பதை நாங்கள் மதிக்கிறோம்,” என்று அவர் கூறினார்.
இந்த உச்சிமாநாடு பிரிக்ஸ்க்கு எதிர்கால ஒத்துழைப்பின் பகுதிகளை அடையாளம் காணவும் நிறுவன வளர்ச்சியை மறுபரிசீலனை செய்யவும் ஒரு பயனுள்ள வாய்ப்பை வழங்கும், என்றார். உச்சிமாநாட்டின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நடைபெறும் ‘பிரிக்ஸ் – ஆப்பிரிக்கா அவுட்ரீச்’ மற்றும் ‘பிரிக்ஸ் பிளஸ் உரையாடல்’ நிகழ்வுகளிலும் பங்கேற்பார் என்று குறிப்பிட்ட மோடி, பங்கேற்க அழைக்கப்பட்ட பல விருந்தினர் நாடுகளுடன் உரையாட ஆவலுடன் இருப்பதாக கூறினார்.
மேலும் “ஜோகன்னஸ்பர்க்கில் இருக்கும் சில தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தவும் நான் எதிர்நோக்குகிறேன்,” என்று அவர் கூறினார்.
The post 3 நாள் பயணமாக இன்று தென் ஆப்பிரிக்கா செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி appeared first on Dinakaran.
