சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு: 2 பேர் காயம்


விருதுநகர்: சிவகாசி அருகே காளையார் குறிச்சியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர், விருதுநகர் உட்பட பல்வேறு இடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. ஆலைகளில் கடந்த சில தினங்களாக தொடர் வெடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் காளையார்குறிச்சியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் இன்று காலை முதல் வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது.

அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வெடி விபத்து நடந்த இடத்துக்கு காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்தனர். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு அறை தரைமட்டமானது. சிவகாசி அருகே காளையார் குறிச்சியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். வெடி விபத்தில் மாரியப்பன் (45), முருகன் (45) ஆகியோர் உயிரிழந்த நிலையில் 2 பெண்கள் காயமடைந்தனர். காயமடைந்த 2 பேர் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், பட்டாசு தயாரிக்கும் போது உராய்வு ஏற்பட்டு வெடிவிபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விபத்து குறித்து, வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு: 2 பேர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: