ஆனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவற்றை மீண்டும் பரிசோதித்தனர். அப்போது மிகவும் நுணுக்கமான முறையில் ஷூ மற்றும் பர்ஸ்களில் 20 பாக்கெட்டுகளில் போதைப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 3490 கிராம் ஹெராயினும், 1896 கிராம் கொக்கைனும் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.44 கோடி என்று வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து ராஜீவ் குமாரை அதிகாரிகள் கைது செய்தனர். இவர் ஆப்பிரிக்க நாடான கென்யாவில் இருந்து சார்ஜா வந்து பின்னர் அங்கிருந்து கோழிக்கோட்டுக்கு வந்துள்ளார். போதைப் பொருளை அவர் கேரளாவில் விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர். யாருக்காக அவர் போதைப் பொருளை கடத்திக் கொண்டு வந்தார் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
The post சார்ஜாவில் இருந்து கோழிக்கோட்டுக்கு விமானத்தில் ரூ.44 கோடி போதை பொருள் கடத்தல்: உத்தர பிரதேச வாலிபர் கைது appeared first on Dinakaran.