சுபாகர், அமல்ராஜ் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, இருவரும் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவில், அரசியல் உள்நோக்கத்தில் தங்களை கைது செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை சார்பில் ஆஜரான அருள் செல்வம், மனு குறித்து பதிலளிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை வியாழக்கிழமைக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
The post சீமான் வீட்டு பணியாளர், பாதுகாவலர் ஜாமீன்மனு காவல்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.