சேலம் கரியகோவில் நீர்த்தேக்கத்தில் இருந்து பழைய பாசன பகுதிகளுக்கு இன்று நீர் திறப்பு

சேலம்: சேலம் கரியகோவில் நீர்த்தேக்கத்தில் இருந்து பழைய பாசன பகுதிகளுக்கு இன்று நீர் திறக்கப்படுகிறது. நாளொன்றுக்கு 3.45 மில்லியன் கனஅடி வீதம் 11 நாட்களுக்கு பழைய பாசன பகுதிகளுக்கு நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய பாசன பகுதிகளுக்கு மார்ச் 6 முதல் தினமும் 2.59 மில்லியன் கனஅடி வீதம் 10 நாள் நீர்திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பால் சேலம் பாப்பநாயக்கன்பட்டி, தும்பல், இடையப்பட்டி கிராமத்திலுள்ள நிலங்கள் பாசன வசதி பெறும் என கூறப்படுகிறது.

The post சேலம் கரியகோவில் நீர்த்தேக்கத்தில் இருந்து பழைய பாசன பகுதிகளுக்கு இன்று நீர் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: