வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 30 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது

சென்னை: சென்னை போரூரில் இப்ராகிம் ஷா என்பவர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 30 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார். 1993-ல் இப்ராகிம் ஷா வீட்டுக்குள் நுழைந்த 4 பேர் கொண்ட மர்மகும்பல் 30 சவரன், ரூ.15,000 கொள்ளையடித்துச் சென்றது. கொள்ளையில் ஈடுபட்ட முத்து, மகேந்திரன் ஆகியோரை போரூர் போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது. வழக்கில் 30 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த சக்திவேலை பெரும்பாக்கத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

The post வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 30 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: