நாட்றம்பள்ளி அடுத்த லட்சுமிபுரம் சோதனைச்சாவடியில் காவலர்களை நியமிக்க கோரிக்கை

நாட்றம்பள்ளி : நாட்றம்பள்ளி அடுத்த லட்சுமிபுரம் சோதனைச்சாவடியில் காவலர்களை நியமிக்க கோரிக்கை எழுந்துள்ளது. நாட்றம்பள்ளி அடுத்த லட்சுமிபுரம் பகுதி வழியாக தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இதன் வழியாக ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள், கார், பஸ் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், லட்சுமிபுரம் பகுதியில் நாட்றம்பள்ளி காவல் நிலையம் சார்பில் திருப்பத்தூர் மாவட்ட எல்லை பகுதியில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

இதில், காவலர்கள் இல்லாததால் இவ்வழியாக அண்டை மாநிலமான ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து மது பாட்டில்கள், குட்கா, பான் மசாலா பொருட்கள் கடத்தப்படுகிறது. பின்னர் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்க லட்சுமிபுரம் சோதனைச்சாவடியில் வாகனங்களை சோதனை செய்ய காவலர்களை பணி அமர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 5 டன்களுக்கு மேல் குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் நாற்றம்பள்ளி அருகே பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post நாட்றம்பள்ளி அடுத்த லட்சுமிபுரம் சோதனைச்சாவடியில் காவலர்களை நியமிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: