இந்நிலையில், மாநிலங்களவை எம்.பி அகிலேஷ் பிரசாத் சிங் ராமேஸ்வரம் – தனுஷ்கோடி இடையே ரயில் பாதை அமைப்பதற்கு ஆண்டு வாரியாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் தெரிவித்துள்ளார். அதில் தமிழ்நாடு அரசு 2023 ஏப்ரல் 21-ம் தேதி ஒன்றிய அரசுக்கு எழுதிய கடிதத்தில் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக ராமேஸ்வரம் – தனுஷ்கோடி பகுதிகள் உள்ளதால், ராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி வரையிலான ரயில் திட்டத்தை கைவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. இவ்வாறு எழுத்து பூர்வ பதில் அளித்துள்ளார்.
The post ராமேஸ்வரம் – தனுஷ்கோடி ரயில் திட்டத்தை கைவிட தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் appeared first on Dinakaran.