விழுப்புரம்: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் வழக்கை நாளை ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 3 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ராஜேஷ் தாஸ்க்கு 3ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. வழக்கு விசாரணைக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
The post முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் வழக்கை நாளை ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு..!! appeared first on Dinakaran.