இந்த திட்டத்தில் அனைத்து பொறியாளர்களும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அனைத்து சாலைகளிலும், சாலையின் எல்லை குறிக்கும் பணி விரைவில் முடிக்கப்பட வேண்டும். சாலை ஓரங்களில் போக்குவரத்து இடையூராக உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகள் அகற்றப்பட வேண்டும். நெடுஞ்சாலைத்துறையின் அனைத்து பணிகளுக்கும் தரக் கட்டுப்பாட்டு பிரிவு அலுவலர்களை கொண்டு தரத்தினை உறுதி செய்த பின்னரே பணப்பட்டுவாடா செய்ய வேண்டும். ஒப்பந்தத்தில் ஒவ்வொரு நிலைக்கும் வரையறுக்கப்பட்டுள்ள காலக்கெடுவிற்குள் முடிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வு கூட்டத்தில், நெடுஞ்சாலைத்துறை செயலாளர் செல்வராஜ், திட்ட இயக்குநர் எஸ்.ஏ.ராமன், சிறப்பு அலுவலர் (டெக்னிக்கல்) சந்திரசேகர், தலைமை பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) சத்தியப்பிரகாஷ், முதன்மை இயக்குநர் செல்வதுரை, நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் சரவணன், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே சாலைகள், பாலப் பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும்: அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு appeared first on Dinakaran.