மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு சுயநினைவு இல்லாததால் உயிரிழந்தவர்கள் குறித்த விபரம் எதுவும் தெரியவில்லை. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்ற விவரங்களை சேகரித்து வருகின்றனர். அத்துடன் தூக்கம் கலக்கத்தில் வாகனம் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் அடிக்கடி வாகன விபத்துக்கள் நடைபெறுவதாக கவலை தெரிவித்த மக்கள், சிசிடிவி கேமராக்களை பொருத்தி போலீசார் கண்காணிக்க கேட்டுக் கொண்டுள்ளனர்.
The post புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் 4 பேர் பலி.. தூக்க கலக்கத்தில் வாகனம் ஓட்டியதால் விபத்தா என விசாரணை!! appeared first on Dinakaran.