ஒரு நாட்டின் செழிப்பின் அளவுகோலாக இருப்பது வேளாண்துறைதான்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: ஒரு நாட்டின் செழிப்பின் அளவுகோலாக இருப்பது வேளாண்துறைதான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வேளாண் வணிக திருவிழாவை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். வேளாண் வணிக திருவிழாவை தொடங்கி வைப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். வேளாண் துறைக்கு முக்கியத்துவம் தரும் வகையில் திமுக அரசு வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்தது. வேளாண் துறை வளர்ச்சி என்பது மக்களின் வாழ்வோடும் உயிரோடும் தொடர்புடையது என்று முதலமைச்சர் கூறினார்.

The post ஒரு நாட்டின் செழிப்பின் அளவுகோலாக இருப்பது வேளாண்துறைதான்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Related Stories: