சொத்துகளை பெற்றுக் கொண்டு பெற்றோரை மகன்கள் தவிக்கவிட்டது தொடர்பான வழக்கில் ஆட்சியர் விசாரிக்க ஐகோர்ட் கிளை ஆணை..!!

மதுரை: சொத்துகளை பெற்றுக் கொண்டு பெற்றோரை மகன்கள் தவிக்கவிட்டது தொடர்பான வழக்கில் ஆட்சியர் விசாரிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மகன்களிடம் உள்ள தனது சொத்துகளை மீட்டுத் தர உத்தரவிடக் கோரி தந்தை ஐகோர்ட் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, ராமநாதபுரம் ஆட்சியர் விசாரித்து 3 மாதத்துக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க ஆணையிட்டார். ராமநாதபுரத்தைச் சேர்ந்த 72 வயது முதியவர் பஜிருதீன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

The post சொத்துகளை பெற்றுக் கொண்டு பெற்றோரை மகன்கள் தவிக்கவிட்டது தொடர்பான வழக்கில் ஆட்சியர் விசாரிக்க ஐகோர்ட் கிளை ஆணை..!! appeared first on Dinakaran.

Related Stories: