பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மல்யுத்த வீராங்கனைகள் போராட்டங்கள் நடத்தினர். அப்போதும், பிரதமர் அமைதியாக இருந்தார். ஆனால், சர்வதேச போட்டிகளில் மல்யுத்த வீராங்கனைகள் பதக்கங்களை வென்று இந்தியா திரும்பிய போது அவர்களுடன் புகைப்படம் எடுக்க அவர் தவறவில்லை. வீராங்கனைகள் எனது மகள் என்று பெருமிதம் பொங்க தெரிவித்தார். இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என அவர் உறுதியளித்திருக்கலாம். அவர்கள் உச்சநீதிமன்றத்துக்கு சென்ற பின்னர்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மணிப்பூர் கலவரத்திலும் குறைந்தபட்சம் அமைதி ஏற்படுவதற்கு அவர் வேண்டுகோள் விடுத்திருக்கலாம்’’ என்றார்.
The post பிரச்னையின் போது மவுனமாக இருப்பவர் மோடி: அரவிந்த் கெஜ்ரிவால் கடும் தாக்கு appeared first on Dinakaran.