×

கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும்: ஆம்ஆத்மி

புதுடெல்லி,ஜூன் 4: கருத்துக்கணிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் சிங் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,’ தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஒரு முறை அல்ல, பல முறை தவறானது என்று நிரூபிக்கப்பட்டதால், நாட்டில் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும்.

இது ஓட்டுக்களை எண்ணும் முன்பு நாட்டு மக்கள், நிர்வாக அமைப்பு மற்றும் தேர்தல் ஆகியவற்றில் செல்வாக்கு செலுத்துவதற்கான தவறான முயற்சியாகும். வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு இந்தியா கூட்டணி 295 இடங்களைப் பெறும். பாஜ வெற்றி என்று வெளியான கருத்துக் கணிப்புகள் அனைத்தும் போலியானவை’ என்று தெரிவித்தார்.

 

The post கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும்: ஆம்ஆத்மி appeared first on Dinakaran.

Tags :
× RELATED கற்பித்தலில் புதுமை படைக்கும்...