×

போலீஸ்காரருக்கு மிரட்டல் பெண் யூடியூபர் கைது

சமயபுரம்: திருச்சி நம்பர் 1 டோல்கேட்டில் நேற்றுமுன்தினம் மாலை சேலத்தில் இருந்து டால்மியாபுரம் சென்ற லாரி வந்த போது, டூவீலரிலிருந்து காஸ் சிலிண்டர் நழுவி லாரிக்கு அடியில் ஓடியது. லாரியை நிறுத்தி சிலிண்டரை எடுக்க முயன்றனர். இதனால் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை சரிசெய்யும் பணியில் அங்கிருந்த போக்குவரத்து போலீஸ்காரர் அரசு ஈடுபட்டார். இதை அந்த வழியாக டூவீலரில் வந்த திருச்சி பாலக்கரையை சேர்ந்த யூடியூபர் கிரிஜா(35), தனது செல்போனில் வீடியோ எடுத்தார். இதைபார்த்த போலீஸ்காரர் அரசு, அவரை அங்கிருந்து செல்லும்படி கூறினார். ஆனால் அவர் நகராமல், நான் ஒரு செய்தியாளர், வக்கீல், யூடியூபர் என கூறி போலீஸ்காரரை திட்டினார். இதை போலீஸ்காரரும் தனது ெசல்போனில் வீடியோ எடுத்தார். எடு..எடு… உன்னால் என்னை என்ன செய்ய முடியும். நான் எஸ்பிக்கிட்ட பார்த்துக்கிறேன் என எஸ்பியின் பெயரை ஒருமையில் கூறி, போலீஸ்காரரை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீஸ்காரர் அரசு, கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தன்னை கிரிஜா பணி செய்யவிடாமல் தடுத்து, தகாத வார்த்தைகளால் திட்டினார். அருகில் பூக்கடையில் நிழலுக்காக வைத்திருந்த குடையை எடுத்து தாக்க முன்றார் என கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து கிரிஜாவை நேற்று காலை கைது செய்தனர். கைதான கிரிஜா, கடந்தாண்டு காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மீது, பாலியல் புகார் கொடுத்ததால் அவரும், மாம்பழச்சாலையில் இன்ஸ்பெக்டர் ஒருவர் மீது குற்றச்சாட்டு கூறியதால் அவரும் மாற்றப்பட்டனர். மேலும் பல்வேறு இடங்களில் பத்திரிகையாளர், வழக்கறிஞர் என கூறி பொய்யான புகார்களை அளித்துள்ளார்.

The post போலீஸ்காரருக்கு மிரட்டல் பெண் யூடியூபர் கைது appeared first on Dinakaran.

Tags : Samayapuram ,Salem ,Dalmiyapuram ,Trichy No. 1 tollgate ,
× RELATED போலீஸ்காரருக்கு மிரட்டல் பெண் யூடியூபர் கைது