பிரபல வங்கி பெயரில் மோசடி; அறிமுகம் இல்லாத நபர்களிடம் குறுஞ்செய்தி பகிர வேண்டாம்: பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தல்

சென்னை: அறிமுகம் இல்லாத நபர்களிடம் குறுஞ்செய்தி பகிர வேண்டாம் என பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு காவல் துறையில் இணைய வழி குற்றப்பிரிவு அவ்வப்போது பொது மக்களுக்கு புதிய இணை வழி குற்றங்கள் குறித்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. அதில் இணைய வழி மோசடி நபர்கள் இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கியின் வாடிக்கையாளர்களை குறிவைத்து பண மோசடி செய்று அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். அந்த குறுஞ்செய்தியில் உங்கள் இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கியின் கணக்கு முடக்கப்பட்டுள்ளது ஆகையால், குறுஞ்செய்தியிலுள்ள லிங்க்கை கிளிக் செய்து உடனே உங்கள் பேன் கார்டு எண்ணை அப்டேட் செய்யுங்கள் என கூறுவர்.

இதை நம் இணையவழி மோசடி நபர் அனுப்பிய அந்த லிங்கை பொதுமக்கள் கிளிக் செய்தவுடன் இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கியின் இணையதளம் போலவே ஒரு போலியான இணையதளம் தோன்றும் அதில் வாடிக்கையாலர் தங்களது வங்கி வேமிப்பு கணக்கு எண், வடிக்கையாளர் அடைமான எண், கைப்பேசி எண், பிறந்ததேதி, நிரந்தர கணக்கு என் (PAN) மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை உள்ளீடு செய்ய கேட்கும். அந்த தகவல்களை அந்த இணைய தளத்தில் கொடுத்தப்பில் OTP யை பதிவு செய்ய கேட்கும். அதில் OTP -யை பதிவு செய்தவுடன் வாடிக்கையாளரின் இந்தியா போஸ்ட் பேமெண்ட் கணக்கிலிருந்து மோசடி நபரின் வங்கி கணக்கிற்கு பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு வாடிக்கையாளர் ஏமாற்றப்படுகின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு இணைய வழி குற்றப்பிரிவு, காவல் துறை கூடுதல் இயக்குநர் சஞ்சய்குமார் பொதுமக்களுக்கு அறிமுகம் இல்லாத நபர்களிடம் தொலைபேசி, குறுஞ்செய்தி, மின்னஞ்சல், பிஷிங் இணையதளம், வாட்ஸ் அப், டெலிகிராம் மற்றும் இதர சமூக ஊடக கையாளுதல்கள் மூலமாக வருகின்ற லிங்குகளை தொடர்பு கொள்ள வேண்டாம் எனவும் மற்றும் OTP யை பகிர வேண்டாம் எனவும் அறிறுத்தினார்.

The post பிரபல வங்கி பெயரில் மோசடி; அறிமுகம் இல்லாத நபர்களிடம் குறுஞ்செய்தி பகிர வேண்டாம்: பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: