பிளான் அப்ரூவலுக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: ஊராட்சி தலைவர் அதிரடி கைது

விருதுநகர்: விருதுநகர் அருகே கத்தாளம்பட்டியைச் சேந்தவர் மணிமாறன் (30). 108 ஆம்புலன்ஸ் டிரைவர். இவர் துலுக்கப்பட்டி ஊராட்சியில் வீடு கட்ட பிளான் அப்ரூவல் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளார். இதுபற்றி துலுக்கப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜனை(54) சந்தித்து பிளான் அப்ரூவல் செய்து தரும்படி கேட்டுள்ளார்.

அதற்கு அவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து மணிமாறன் அளித்த புகாரின்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பினர். இதனைத்தொடர்ந்து நேற்று மணிமாறன் துலுக்கப்பட்டி ஊராட்சி அலுவலகத்துக்கு சென்று தலைவர் நாகராஜனிடம் பணத்தை கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், நாகராஜனை கைது செய்தனர்.

The post பிளான் அப்ரூவலுக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: ஊராட்சி தலைவர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Related Stories: