பூச்சி மருத்து குடித்து சிறுமி தற்கொலை

ஊத்துக்கோட்டை: பூச்சி அத்திப்பேடு அடுத்த வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த தம்பதியின் 17 வயதுடைய மகள் செங்குன்றத்தில் படித்து வருகிறார். நேற்றுமுன்தினம் தாய் தனது மகளை வயல் வேலைக்கு அழைத்துள்ளார். அப்போது மகள் மறுத்ததால் தாய் அவரை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மகள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயக்க நிலையில் இருந்துள்ளார்.

வீட்டிற்கு வந்த தாய் மயங்கியிருந்த மகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து வெங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பூச்சி மருத்து குடித்து சிறுமி தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: