×

வீட்டில் மது விற்றவர் கைது

திருத்தணி: திருத்தணி சுற்று வட்டார பகுதிகளில் முறைகேடாக டாஸ்மாக் கடைகளில் அதிக அளவில் மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் கே.ஜி.கண்டிகையில் நேற்று திருத்தணி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி தலைமையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, சிரஞ்சீவி (52) என்பவர் வீட்டில் பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த 42 குவாட்டர் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பிறகு சிரஞ்சீவியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post வீட்டில் மது விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Tiruthani ,Tasmac ,Rakikumari ,KG Kandigai ,
× RELATED திருத்தணி-நாகலாபுரம் நெடுஞ்சாலையில்...