4 மாதம் அவகாசம் உள்ளது; 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் அவசரப்பட வேண்டாம்: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் பேட்டி

டெல்லி: 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் அவசரப்பட வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். 2000 ரூபாய் நோட்டு மாற்றம் தொடர்பாக வங்கிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ரூ.2000 நோட்டுகளை மாற்ற போதிய ஏற்பாடுகளை மக்களுக்கு செய்து கொடுக்கவும், பொதுமக்கள் காத்திருப்பதற்கான பந்தல்கள், குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை வங்கிகள் செய்து தர வேண்டும் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் அவசரப்பட வேண்டாம்.

ரூ.2,000 நோட்டுகளை திரும்ப பெறும் நடவடிக்கை வழக்கமான நடைமுறை தான். ரூ.1,000,ரூ.500 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதால் உடனடி தேவைக்காகவே ரூ.2,000 நோட்டுகள் வழங்கப்பட்டன. உயர்மதிப்புள்ள ரூ.2,000, ரூ.500 நோட்டுகளில் பாதுகாப்பு அம்சங்களில் எந்த குறைபாடும் இல்லை. பண நிர்வாகத்தின் ஒரு பகுதியாகவே 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுகிறது. வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற போதிய ஏற்பாடுகள் செய்யப்படும். 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் இறுதிவரை புழக்கத்தில் இருக்கும். 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற 4 மாத காலம் அவகாசம் உள்ளது. அனைத்து 2000 ரூபாய் நோட்டுகளும் திரும்ப வரும் என்று நம்புகிறோம் என கூறினார்.

The post 4 மாதம் அவகாசம் உள்ளது; 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் அவசரப்பட வேண்டாம்: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: