2021ம் ஆண்டு கொரோனா காலத்தில், பஷீர் அகமது என்பவருடன் சமூக ஊடகம் வழியே தொடர்பு ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தோம். எங்களுடைய குடும்பத்தினர் வீடியோ கால் மற்றும் வாய்ஸ் கால் வழியே ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொண்டனர். கடந்த 2023ம் ஆண்டில் எனக்கு பாஸ்போர்ட் கிடைத்தது. விசாவுக்கு விண்ணப்பித்தேன். அனைத்து சட்ட ஆவணங்களையும் சமர்ப்பித்ததும் எனக்கு விசா கிடைத்தது. விசாரணை நடந்து விட்டால் அனைத்தும் முடிந்து விடும் என என்னிடம் கூறப்பட்டது. ஆனால், என்னால் காவல் நிலையத்திற்கு செல்ல முடியவில்லை. சட்ட முறையிலேயே நான் சென்றுள்ளேன் என்று நான் தெளிவுப்படுத்தி விட்டேன்’ என்றார். ஆனால் துணை காவல் ஆணையாளர் அமர் சிங் ஜாதவ் கூறும்போது, ‘இந்த விவகாரம் பற்றி தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்’ என கூறினார்.
The post பாகிஸ்தானுக்கு செல்வதற்காக பாஸ்போர்ட் பெற போலியான ஆவணம் பயன்படுத்திய பெண் கைது appeared first on Dinakaran.