இந்திய எல்லைக்குள் நுழைந்த பாக். நபர்

பெரோஸ்பூர்: பஞ்சாப் மாநிலம். பெரோஸ்பூர் மாவட்டத்தில் கஜினிவாலா கிராமம் உள்ளது. அப்பகுதியில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை அமைந்துள்ளது. இந்த நிலையில், நேற்று இந்திய எல்லையை கடந்து ஒரு பாகிஸ்தான் நபர் நுழைவதை பாதுகாப்பு படையினர் அறிந்து உடனடியாக அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர் சாதாரண தோற்றத்துடனும், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் அல்லது வெடிபொருட்கள் எதுவும் அவரிடம் இல்லாததையும் பாதுகாப்பு படையினர் அறிந்தனர்.
உள்நோக்கம் இல்லாமல் அந்த நபர் இந்திய எல்லைக்குள் வந்ததை அறிந்த இந்திய வீரர்கள் அந்த பாகிஸ்தானி நபரை மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு வீரர்களிடம் ஒப்படைத்தனர்.

The post இந்திய எல்லைக்குள் நுழைந்த பாக். நபர் appeared first on Dinakaran.

Related Stories: