மேலும் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் என்ன பேசினார் என்பது மக்களுக்கு தெரியும் என்றும் பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “பணவீக்கத்தை எண்ணி பெண்களும், கருப்புச் சட்டங்களை எண்ணி விவசாயிகளும், அக்னிவீரர் திட்டத்தை எண்ணி இளைஞர்களும், வினாத்தாள் கசிவை எண்ணி மாணவர்களும், தங்கள் மீதான வெறுப்பு மற்றும் வன்முறையை எண்ணி சிறுபான்மை மக்களும் அச்சத்தில் உள்ளனர்.பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அச்ச உணர்வை எங்கும், எதிலும் பரப்புகிறது. மக்கள் மத்தியில் அச்சம், வன்முறை மற்றும் வெறுப்பினை பரப்பும் யாரும் பலன் அடைய முடியாது. பாஜக இந்த பாணி அரசியலை உடனே நிறுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.
The post ராகுல் காந்தி வெறுப்பு பேச்சுகளை பேசும் பாஜக தலைவர்களை பற்றி தான் விமர்சித்தார்.. இந்துக்களை அல்ல : தெளிவுபடுத்திய பிரியங்கா காந்தி!! appeared first on Dinakaran.