ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பி. ஆக தொடர முடியாது: அவர் எந்த கட்சியும் சாராதவர் என அறிவிக்க வேண்டும்.! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பி. ஆக தொடர முடியாது; கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் எப்படி எம்.பி., ஆக இருக்க முடியும், அவர் எந்த கட்சியும் சாராதவர் என அறிவிக்க வேண்டும்” என சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான ‘உலகம் சுற்றும் வாலிபன்’திரைப்படம் வெளியாகி ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்தன், பொன் விழாவை யொட்டி வண்ணாரப்பேட்டையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். வண்ணாரப்பேட்டை காளிங்கராயன் தெருவில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்பட பேனருக்கு மலர்தூவி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார், “போஸ்டர் ஒட்டாமல் வெற்றி படமாக அமைந்த ஒரே படம் உலகம் சுற்றுப் வாலிபன் படம் தான் என தெரிவித்தார். தமிழக மட்டுமல்ல உலகம் முழுவதும் எம்ஜிஆர் மட்டும்தான் சூப்பர் ஸ்டார் என தெரிவித்தார். உலகம் சுற்றும் வாலிபன் வெளிவந்த பிறகு அதிமுக பல்வேறு வெற்றிகளை பெற்றது என்றும் திண்டுக்கல் தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது என தெரிவித்தார். ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பி. ஆக தொடர முடியாது என தெரிவித்தார். கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் எப்படி எம்.பி.யாக இருக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார். அவரை எந்த கட்சியும் சாராதவர் என அறிவிக்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார்.

The post ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பி. ஆக தொடர முடியாது: அவர் எந்த கட்சியும் சாராதவர் என அறிவிக்க வேண்டும்.! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: