“விரைவில் ஓபிஎஸ் சிறைக்கு செல்வார்”: எடப்பாடி பழனிசாமி பேட்டி

கோவை: விரைவில் ஓபிஎஸ் சிறைக்கு செல்வார் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சில ரகசியங்களை வெளியிட்டால், எடப்பாடி பழனிசாமி சிறை செல்ல நேரிடும் என ஒபிஎஸ் தெரிவித்திருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். என் மீது பழி சொல்லி ஓபிஎஸ் தப்பிக்க பார்க்கிறார். ஓபிஎஸ் மீதான வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது, அதில் அவருக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும். ஜெயலலிதாவிற்கு ரூ.2 கோடி கடன் கொடுத்ததாக ஓபிஎஸ் சொன்னது, மோசமான வார்த்தை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

The post “விரைவில் ஓபிஎஸ் சிறைக்கு செல்வார்”: எடப்பாடி பழனிசாமி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: