இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர். ஆனால், மனு நேற்று பட்டியலிடப்படாத நிலையில் ஓ.பி.எஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, மனு தாக்கல் நடைமுறைகள் முடிந்த நிலையிலும் விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை என்றும் வழக்கை இன்றே விசாரிக்க வேண்டுமென்றும் கோரினார். முறையீடு செய்யப்பட்ட அன்றே மனு தாக்கல் செய்யாத நிலையில் எப்படி விசாரணைக்கு எடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வரும் புதன்கிழமை விசாரணைக்கு எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
The post அதிமுக பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த தடை விதித்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் ஓ.பி.எஸ் வழக்கு: 15ம் தேதி விசாரணை appeared first on Dinakaran.