கடந்த செப்டம்பர் மாதம் மற்றொரு குப்பை அள்ளும் மினி லாரியும் பழுதானது இதையும் அந்த பகுதியில் நிறுத்தியுள்ளனர். இதனால் அந்த இரண்டு வாகனங்களும் பயன்பாடின்றி வீணாகி வருகிறது. பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் ஓட்டையான டிராக்டரில்தான் குப்பைகளை எடுத்துச் செல்லும்போது ஓட்டை வழியாக குப்பைகள் வெளியே கொட்டுகிறது. கடந்த மாதம் குப்பைகளை எடுக்க புதிதாக 4 பேட்டரி ஆட்டோக்கள் அரசு வழங்கியது. ஆனால் அந்த வாகனத்தை பயன்படுத்தாமலே வைத்துள்ளனர். எனவே குப்பை அள்ளும் லாரிகளை சீரமைக்க வேண்டும், புதிய பேட்டரி ஆட்டோக்களை விரைவில் இயக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் குப்பை அள்ள புதிய பேட்டரி வாகனம் பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை appeared first on Dinakaran.