இந்நிலையில் உச்சநீதிமன்ற வளாகத்தில் இணைய வழி வழக்கு தாக்கல் 2.0 சேவை, இ சேவை மையத்தையும் தலைமை நீதிபதி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி பேசுகையில்,‘‘வழக்கறிஞர்களுக்கு இணைய வழி வழக்கு தாக்கல் செய்வதற்கான வசதி 24 மணி நேரமும் கிடைக்கும். தொழில்நுட்பங்களை கையாள முடியாமல் இருக்கும் வழக்கறிஞர்களுக்கு உதவுவதற்காக 2 உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. இதை அனைத்து வழக்கறிஞர்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதே போல் இ சேவை மையங்களுக்கு சென்று இணைய வழி வழக்கு தாக்கல் செய்வதோடு நாட்டின் வேறு பகுதிகளில் உள்ள நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களில் உள்ள வழக்குகளின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்’’ என்றார்.
The post இணைய வழி வழக்கு தாக்கல் 2.0 சேவை: உச்ச நீதிமன்றத்தில் துவக்கி வைப்பு appeared first on Dinakaran.