இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் இணைய வழியே உணவு விநியோகம் உள்ளிட்ட சேவைப் பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புசாரா கிக் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கென தனியே நலவாரியம் அமைக்கப்படும் என கடந்த ஆக.15ம் தேதி சுதந்திர தின உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நல வாரியம் எனும் புதிய நல வாரியம் தோற்றுவித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கிக் தொழிலாளர்கள் இவ்வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு பெற்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற வழிசெய்யப்பட்டுள்ளது.
The post ஆன்லைன் டெலிவரி தொழிலாளர் நல வாரியம் அமைப்பு: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.