இதன் மூலம் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அதிக வெப்பம் காரணமாக இதுபோன்று ஏற்பட்டுள்ளது என தெரிவித்து அதனை சரிசெய்யும் பணியை மேற்கொண்டனர். ஆனாலும், எண்ணெய் கிணற்றில் அதிக அடர்த்தி காரணமாக அடிக்கடி கசிவு இருந்து வருவதால், நிரந்தரமாக மூட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் ஓ.என்.ஜி.சி, நிர்வாகம், விவசாயிகள் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ஓ.என்.ஜி.சி தரப்பில் எரிவாயு கிணற்றில் இருந்து வரும் அதிகப்படியான எரிவாயு அழுத்தத்தை முழுமையாக வெளியேற்றி கிணற்றை பாதுகாப்பான நிலையில் வைப்பதற்கு 39 நாட்கள் ஆகும்.
அதன் பின்னர் கிணற்றை முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கான பணியை கலெக்டர் தலைமையில் 8 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவினர் கண்காணிப்பதற்கும் முடிவு செய்யப்பட்டது. மேலும் பாதுகாப்பு கருதி போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினரும் பணியில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் இந்த எண்ணெய் கிணற்றை நிரந்தரமாக மூடுவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் எஸ்.பி ஜெயக்குமார், மன்னார்குடி ஆர்.டி.ஓ கீர்த்தனாமணி, ஓ.என்.ஜி.சி முதன்மை பொது மேலாளர் ஜோதீஸ், விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post திருவாரூர் அருகே விஷவாயு கசிவா?.. ஓஎன்ஜிசி எண்ணெய் கிணற்றை நிரந்தரமாக மூட முடிவு: கலெக்டர் உத்தரவு appeared first on Dinakaran.