ஒரே நாடு ஒரே தேர்தல் நடக்காது: வைகோ பேட்டி

திருவில்லிபுத்தூர்: இந்தியா முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஒரு நாளும் நடக்காது என்றும் அது மக்களை துண்டு துண்டாக்கும் முயற்சி என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே புதுசென்னாகுளம் பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறுகையில், ‘‘தமிழக வெள்ள பாதிப்பிற்கு ஒன்றிய அரசு ரூ.450 கோடி மட்டுமே கொடுத்துள்ளது. ஒன்றிய அரசு ஓரவஞ்சனை செய்கிறது. ஒரு கண்ணில் வெண்ணெய் வைத்துக் கொண்டும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தில் சுண்ணாம்பை வைக்கும் செயலில் ஈடுபடுகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஒரு நாளும் நடக்காது. அது மக்களை துண்டு துண்டாக்கும் முயற்சி’’ என்றார்.

The post ஒரே நாடு ஒரே தேர்தல் நடக்காது: வைகோ பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: