2,400 மெகா வாட் தயாரிப்பு திறனுடன் ரூ.19,422 கோடி முதலீட்டில் இந்த அனல் மின் நிலையம் அமைக்கப்படும் என்றும் தலா 800 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 3 அலகுகள் அமைக்க உள்ளதாகவும் நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் பணிகள் இவ்வாண்டு இறுதிக்குள் தொடங்கி 2028 -2029க்குள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலையில் இருந்து தமிழகத்திற்கு 1,450 மெகாவாட் மின்சாரமும் புதுச்சேரிக்கு 100 மெகா வாட் மற்றும் கேரளாவிற்கு 400 மெகாவாட் மின்சாரமும் வழங்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துதல் மற்றும் இதர ஒப்புதல்கள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.
The post ஒடிசாவில் புதிய அனல்மின் நிலையத்தை அமைக்கிறது என்எல்சி நிர்வாகம் : தமிழகத்திற்கு 1,450 மெகாவாட் கிடைக்கும் appeared first on Dinakaran.